சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’.
நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் அஜித்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர் சரண், அஜித் ஏன் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ” அஜித்தைப் பொறுத்தவரை அவர் தனது ரசிகர்களை வெறும் ரசிகர்களாகப் பார்க்காமல், அவர்களை மிகவும் மதிக்கக்கூடியவர்.
“அமர்க்களம்’ படம் வெளியான அன்றைய இரவே சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. அந்த அளவிற்கு அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு இருந்தது.