காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

ஊட்டியை அடுத்துள்ள பைகமந்து கிராம பகுதியில் விவசாயிகளின் நிலங்களில் வெள்ளைப் பூண்டு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

+

ஊட்டி

ஊட்டி மலைப்பூண்டு

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பல்வேறு மலை காய்கறி பயிர்களை விளைவிக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்குகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறி பொருட்கள் பல்வேறு வெளி சந்தைகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் ஆகியவை போலவே மலைப்பூண்டு விவசாயமும் அதிக அளவில் நடைபெறுகிறது. சிறந்த லாபமடையும் ஒரு தொழிலாகவும் பூண்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது

இந்நிலையில் தற்போது ஊட்டியை அடுத்துள்ள பைகமந்து கிராம பகுதியில் விவசாயிகளின் நிலங்களில் வெள்ளைப் பூண்டு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் மூன்று மாத காலம் சிரமப்பட்டு விவசாயம் மேற்கொண்டு தற்பொழுது அறுவடை செய்யும் பொழுது மகிழ்ச்சியுடன் பணிகளில் ஈடுபடுகின்றனர். வெள்ளைப் பூண்டு ஒரு சில சமயங்களில் ரூபாய் நானூறு வரையிலும் ஒரு கிலோவிற்கு விற்பனையாகும். ஆனால் ஒரு சில சமயங்களில் 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை ஆவதால் குறிப்பிட்ட விலையை எதிர்பார்த்து விவசாயம் மேற்கொள்ள முடியாது. இருப்பினும் இந்த முறை நல்ல விலைக்கு பூண்டு விற்பனையாவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளைப்பூண்டு அறுவடை குறித்து விவசாயி சிவகுமார் தெரிவிக்கையில், வெள்ளைப்பூண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி விலை விற்கும். எங்களது வெள்ளை பூண்டு 330 முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த முறை மழை குறைவால் சமாளித்து விட்டோம். இனிவரும் நாட்களில் மழையைப் பொறுத்து வெள்ளை பூண்டு விவசாயம் மேற்கொள்ள முடியும். இதற்கு முதலீடு அதிகமாக உள்ளதால் நல்ல விலையும் விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும். ஒரு ஏக்கருக்கு 7 லட்சம் முதல் 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யப்படுகிறது. 300 ரூபாய்க்கு மேல் விற்பனையானால் 10 லட்சத்திற்கு மேலாக பணம் கிடைக்கும். இந்தக் காலகட்டங்களில் பூண்டு விளைச்சல் சிறப்பானதாக இருக்கும். பூண்டின் தரமும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Thank You

Related Posts

ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 9:55 PM IST புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார் கொலை வழக்கு பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான…

தாய், மகன் வெட்டிக்கொலை… வீட்டிற்குள் நடந்த கொடூர சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 10:12 PM IST சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த தாய் மற்றும் தடுக்க வந்த மகனை வெட்டிக் கொன்ற நபர் தானும் மரத்தில தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது செய்தி18…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

  • By admin
  • April 25, 2026
  • 6 views
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 4 views
காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 10 views
கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 9 views
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

  • By admin
  • April 25, 2026
  • 10 views
“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

  • By admin
  • April 25, 2026
  • 11 views
சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி
.site-info { display: none; }