ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்

ராம்குமார் கொலை வழக்கு
ராம்குமார் கொலை வழக்கு

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கை கோரியது. ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என முடிவுக்கு வந்த ஆணையம், வழக்கை கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முடித்துவைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், எந்த விசாரணையும் நடத்தாமல், சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்தது உறுதியானதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவல்துறை, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்றும் குறி, ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Thank You

Related Posts

தாய், மகன் வெட்டிக்கொலை… வீட்டிற்குள் நடந்த கொடூர சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 10:12 PM IST சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த தாய் மற்றும் தடுக்க வந்த மகனை வெட்டிக் கொன்ற நபர் தானும் மரத்தில தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது செய்தி18…

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: திருவள்ளூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை – ஆட்சியர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 10:21 PM IST தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் இந்த பாதுகாப்பு அறைகள் (Strong Rooms) முறையாக சீலிடப்பட்டுள்ளன வாக்கு எண்ணிக்கை மையங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு நேற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

  • By admin
  • April 25, 2026
  • 6 views
“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

  • By admin
  • April 25, 2026
  • 8 views
சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

சார்லோட் பிளேயர் செயலில்; ரிக்கி செயின்ட்ஸின் அறிமுகம் & அடுத்த வாரம் இன்னும் பல தொகுப்புகள்

  • By admin
  • April 25, 2026
  • 1 views
சார்லோட் பிளேயர் செயலில்; ரிக்கி செயின்ட்ஸின் அறிமுகம் & அடுத்த வாரம் இன்னும் பல தொகுப்புகள்

ஐபிஎல் 2026: சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!

  • By admin
  • April 25, 2026
  • 6 views
ஐபிஎல் 2026:  சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!

ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 7 views
ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Pasumai Vikatan – 10 May 2026 – நெல், கோதுமை ஊக்கத்தொகை நீக்கம்… அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் அம்பலம்!

  • By admin
  • April 25, 2026
  • 10 views
Pasumai Vikatan – 10 May 2026 – நெல், கோதுமை ஊக்கத்தொகை நீக்கம்… அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் அம்பலம்!
.site-info { display: none; }