கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் இந்த பாதுகாப்பு அறைகள் (Strong Rooms) முறையாக சீலிடப்பட்டுள்ளன
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) அமைதியான முறையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு சீலிடப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் இந்த பாதுகாப்பு அறைகள் (Strong Rooms) முறையாக சீலிடப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க, விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது:
இவை தவிர, 24 மணி நேரமும் செயல்படும் வயர்லெஸ் கண்காணிப்பு அறைகள் மற்றும் நாசவேலை தடுப்பு குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 18 வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் இந்த பாதுகாப்பு பணிகளை சுழற்சி முறையில் மேற்பார்வையிடுவர்.
பாதுகாப்பு மைய வளாகங்கள் முழுவதும் 387 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் இந்த கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், வளாகத்திற்குள் தனியாக அமைக்கப்பட்டுள்ள திரைகள் மூலம் நேரலையாகப் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களின் மேலே ட்ரோன்கள் அல்லது எவ்வித பறக்கும் சாதனங்களும் பறக்கக் கூடாது என ‘நோ பிளை ஜோன்’ (No Fly Zone) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24, 2026 10:21 PM IST