கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நான்கு தேர்தல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவுடன் ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாகனக் கண்காணிப்பு மற்றும் சிவிஜில் ஆப் புகார்களுக்கான 24 மணிநேர ஜிபிஎஸ் கட்டுப்பாட்டு அறையும்,தேர்தல் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் முலம் பெறப்படும் புகார்களை கண்காணிக்க மாநிலத் தொடர்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 20,757 உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் 3 ஆயிரம் துப்பாக்கிகள் தவிர்த்து அனைத்து துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 5, 938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேடப்படும் குற்றவாளிகளில் 2,650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மறுபுறம், நெல்லை தொகுதிக்குட்பட்ட பாரதியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம் திருமண விழா வரவேற்பு போன்று அலங்கார மின் விளக்குகள், சிவப்பு கம்பள தரை விரிப்பு, வாழை மரம், பலூன்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் வாக்காளர்களின் செல்போன்களைப் பாதுகாக்க பிரத்யேக பைகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.