தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam



தமிழக காங், தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என, சொல்லிக் கொண்டு, ஹிந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ் சாட்டி இருந்தார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் செல்வபெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு  கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால், செல்வப்பெருந்தகை கூறியது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை’ என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவும், வருமான வரித்துறை வலியுறுத்தி உள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக  கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம், யார் சொல்வது உண்மை என விசாரித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளை, ராகுலின் கவனத்திற்கு  வேணுகோபால் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை செயலால், ஏற்கனவே திமுக உடன் கூட்டணிக்கு ராகுலுக்கு செல்வபெருந்தகை கடும் நெருக்கடி அளித்து இருந்தார். இதனால் ஏற்கனவே செல்வபெருந்தகை மீது ராகுல் கடும் அதிருப்தியில் உள்ளார். தற்போது வருமானவரித்துறை ரெய்டு விஷயத்தில் ராகுல் ‘கடும் அப்செட்’ ஆகி உள்ளார்.

இதன் காரணமாக செல்வபெருந்தகை விரைவில் கல்தா கொடுக்க டெல்லி காங்கிரசு தயாராகி விட்டதாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் முடிந்ததும், தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என, செல்வப்பெருந்தகை ஏற்கனவே கூறியுருந்தது குறிப்பிடத்தக்கது.



Thank You

Related Posts

மாம்பழ சின்னம் முடக்கக்கோரிய ராமதாசு வழக்கு: அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு – Kumudam

உள்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26 ம் தேதி உத்தரவிட்டது.  …

திமுக வாக்களர்களுக்கு கொடுக்க 60 பெட்டிகளில் இருந்த பொருட்கள்: பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்  – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. வேட்புமனு பரிசீலினை முடிந்து அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

  • By admin
  • April 23, 2026
  • 5 views
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 9 views
தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam

இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ இன்றும் ஹிட் ஏன்?

  • By admin
  • April 23, 2026
  • 8 views
இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ இன்றும் ஹிட் ஏன்?

TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 23, 2026
  • 3 views
TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு தொடரும் சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 6 views
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு தொடரும் சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!  – Kumudam
.site-info { display: none; }