Secret Behind Puthu Maappillaikku Song From Apoorva Sagodharargal Movie: உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடல் இன்றும் ஏன் எனர்ஜி குறையாமல் உள்ளது? அதன் இசை, படப்பிடிப்பு மற்றும் சுவாரசியமான பின்னணித் தகவல்கள்
நடிகர் கமல் ஹாசன் நடித்த, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற "புதுமாப்பிள்ளைக்கு" பாடல் இன்று வரை பலரின் விருப்பமான பட்டியலில் இருக்கிறது, 1989 ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைல்கல் என்றே சொல்லலாம்.
காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
இந்தப் படத்தில் கமல் ஹாசன் இரு வேடங்களில் நடித்திருப்பார், அதில் குள்ளமான கதாபாத்திரமான அப்புவின் அண்ணன் ராஜாவுக்காக உருவாக்கப்பட்டதே "புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா" என்ற பாடல். இந்தப் பாடல் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பின்னணியை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு மெட்டு அமைக்கும்போது இசையமைப்பாளர்கள் பல்வேறு உந்துதல்களைப் பெறுவார்கள்.
அந்த வகையில், இந்தப் பாடலுக்காக நடிகர் கமல் ஹாசன் ஒரு குறிப்பிட்ட விருப்பத்தை முன் வைத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் ஒரு உற்சாகமான பாடல் தனக்கு வேண்டும் என்று அவர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேட்டார். குறிப்பாக, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்" என்ற பாடலின் துள்ளலான மெட்டும், அதன் நடன அமைப்பும் கமல் ஹாசனை மிகவும் கவர்ந்திருந்தது. அதே போன்ற ஒரு ‘வைப்’ இந்தப் பாடலிலும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இளையராஜா அந்தப் பழைய பாடலின் தாளத்தையும், மெட்டையும் உள்வாங்கிக்கொண்டு, அதற்கு நவீனமான அதேசமயம் புதுமையான ஒரு வடிவத்தைக் கொடுத்தார். எம்.ஜி.ஆர் பாடலின் அதே தாள கதியில், ஆனால் முற்றிலும் புதிய இசைக் கோர்ப்புகளுடன் "புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா" பாடலின் மெட்டை அவர் உருவாக்கினார்.
விஜே ஆதவனுடன் ரகசிய வாழ்க்கை – குழந்தை பிறந்த பின் அம்பலப்படுத்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை!
மெட்டு தயாரானதும், கவிஞர் வாலி இந்தப் பாடலுக்கு வரிகளை எழுதினார். ஒரு மாப்பிள்ளை தனது காதலி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதை தனது நண்பர்களிடம் மகிழ்ச்சியுடன் பாடுவது போன்ற சூழலுக்கு ஏற்ப, வாலி மிக எளிய மற்றும் துள்ளலான வரிகளை அமைத்தார். இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய விதம், பாடலுக்கு கூடுதல் மெருகூட்டியது. 90-களில் இருந்து இன்று வரை, சுமார் மூன்று தசாப்தங்களைக் கடந்தும், தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான திருமண விழாக்களில் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருப்பதில்லை. மணமகன் வீட்டார் உற்சாகமாகக் கொண்டாடும் ஒரு பிரத்யேகப் பாடலாக இது மாறிவிட்டது. ஒரு பழைய பாடலின் தாக்கத்தில் உருவானாலும், இன்று தனது தனித்துவமான அடையாளத்தால் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பாக இந்தப் பாடல் திகழ்கிறது.