கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மணிப்பூர் ஆளுநராக இருந்துவரும் அஜய் குமார் பல்லா தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் ராஜினாமா செய்துள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு அஜய் குமார் பல்லா ஆளுநராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் மேற்கு வங்கத்தில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தின் ஆளுநராக சி.என். ஆனந்த் போஸ், மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் சர்ச்சைகளைப் போலவே மேற்கு வங்க மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயும் சர்ச்சைகளும், சலசலப்புகளும் இருந்துவருகின்றன.
இந்த 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு தேர்தல் வரவிருக்கிறது. இந்தச் சூழலில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதும், அம்மாநில ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட இருக்கிறார் என மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில், “சி.என். ஆனந்த் போஸ் தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணத்தை இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை.
இந்நிலையில், மணிப்பூர் ஆளுநராக இருந்துவரும் அஜய் குமார் பல்லா தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.