கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Weather Update | தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வாட்டியது. கரூர் பரமத்தி, ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும், மதுரை நகரில் 103 டிகிரி ஃபான்ஹீட் அளவுக்கும் வெயில் தகித்தது.
தருமபுரி, நாமக்கல், திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும் வெயில் கொளுத்தியது. திருத்தணி, திருப்பத்தூர் மற்றும் சேலம் 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும், கோவையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், உள்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. மழையின்போது இடி, மின்னலுடன், 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏப்ரல் 21, 2026 11:07 AM IST