கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
முதல் தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முதல்தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில், கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்ட நிலையில், இன்று காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், முதல்தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
#ஜஸ்டின் முதல் தலைமுறை வாக்களார்கள் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்; உங்கள் வாக்குகளை வேறு யாருக்கும் போட்டு வீண்டிக்காமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சின்னங்களுக்கு வாக்களியுங்கள் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியீடு#எடப்பாடி பழனிசாமி #ADMK… pic.twitter.com/R6wSYWkcWt
— நியூஸ்18 தமிழ்நாடு (@News18TamilNadu) ஏப்ரல் 21, 2026
வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது; “முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் முதல் தலைமுறையினர், வரும் 23ஆம் தேதி வாக்கு செலுத்துவதற்கு முன்பு ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். கல்லூரியில் சேர்வதற்கு முன்பு சிந்தித்து சேரும் திறமைமிக்கவர்கள், உங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கும்போது, அது எவ்வளவு முக்கியம் என்பதை உணரவேண்டும். நீங்கள் தவறானவரை தேர்ந்தெடுத்தால், அது உங்களை மட்டுமின்றி உங்களின் அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும்.
திமுகவின் கடந்த ஐந்து வருட ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சீரழிந்துவிட்டது. மாணவர்கள் இடையே போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. எனவே இரண்டு கட்சிகளையும் சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்தை சிந்தித்து, வாக்களிக்க வேண்டும். திமுகவை விரட்ட வேண்டும் எனும் எண்ணத்தில் இருக்கும் நீங்கள் வேறு யாருக்கும் உங்கள் வாக்கை செலுத்தி வீணடிக்காமல், என்.டி.ஏ. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு பேசியுள்ளார்.
“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி