கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
திமுக பாக முகவர்கள் 75 ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் கால் பிரிட்ஜிங் முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடினார்.
எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்றும் எந்த வித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேர்தல் நாளில் கடைசி வாக்கு பதிவாகும் வரை வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்கள் இருக்க வேண்டும் என கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக பாக முகவர்கள் 75 ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் கால் பிரிட்ஜிங் முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட இடைப்பட்ட நாட்களில் முழு மூச்சுடன் பாக முகவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கருப்புச் சட்டமான Delimitation Bill-ல் நாம் வென்றது டிரெய்லர்தான், இன்னும் பல போர்கள் நம் முன்பு இருக்கின்றன என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனக் கூறிய முதல்வர், தமிழ்நாட்டைத் தகர்க்க வரும் டெல்லி அணியைத் தடுத்து நிறுத்த நமது கூட்டணியால் தான் முடியும் என உறுதிபடத் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று ஆதரவு கேட்க வேண்டும் என்றும், வாக்குப் பதிவு நாளில் திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் ஒன்று கூட விடுபட்டு விடக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்றும் எந்த வித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக வார் ரூம் எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
ஏப்ரல் 20, 2026 10:16 PM IST