சென்னை உள்பட 8 மாவட்டங்களில் சிக்குன் குனியா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வார்னிங் – Kumudam


இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக தற்போது சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் சோர்வு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் சிக்கன் குனியா பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் https://ncvbdc.mohfw.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் சிக்கன்குனியாவால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் போதுமான ரத்த மாதிரிகளைச் சேகரித்து ‘IgM Elisa’ பரிசோதனை மூலம் பாதிப்பை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுக்கெனத் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு கொசுவலைகளுடன் கூடிய படுக்கை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நீர் தேங்கும் கொள்கலன்களை அப்புறப்படுத்த வேண்டும்.

வாரந்தோறும் தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், பெரிய நீர்நிலைகளில் கொசுப்புழு நாசினிகளைத் தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுமக்களிடையே கொசுக்கடியிலிருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் வீட்டைச் சுற்றியுள்ள தண்ணீர் தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும், முழுக்கை சட்டைகளை அணியவும், தூங்கும்போது கொசுவலைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் வீடுகளில் அதிகப்படியான நீர் சேமிப்பைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தினசரி அடிப்படையில் கண்காணித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Thank You

Related Posts

தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த அவர் தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்…

TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 9:47 PM IST 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

  • By admin
  • April 23, 2026
  • 6 views
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
.site-info { display: none; }