Unique Polling Station: 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி… இந்தியாவையே வியக்க வைத்த ஆண்டிபட்டி ‘வெள்ளிமலை’ கிராமம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த பெருமை ஆண்டிபட்டி தொகுதிக்கு உண்டு

+

வெள்ளிமலை

வெள்ளிமலை

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட ‘வெள்ளிமலை’ என்ற குட்டி வாக்குச்சாவடி ஒட்டுமொத்த இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 5 வாக்காளர்களுக்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த அதிரடி நடவடிக்கை, ஜனநாயகத் திருவிழாவின் மகுடம் எனப் போற்றப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த பெருமை ஆண்டிபட்டி தொகுதிக்கு உண்டு. இத்தொகுதியின் கடமலை-மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ள வெள்ளிமலை கிராமம், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. இங்கு ஏலம், காபி போன்ற பணப்பயிர்கள் அதிகளவில் விளைகின்றன.

கடந்த 1990 வரை இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். ஆனால், இப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின், வனத்துறையின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள், படிப்படியாக சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இக்கிராமத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6-ஆக இருந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் (SIR), ஒருவரது பெயர் நீக்கப்பட்டு, தற்போது செந்தில், ஜெயராணி, சுதா, பவுல் மற்றும் ரோகித் என மொத்தம் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்பதால், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை இல்லை என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்த 5 பேரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, அங்குள்ள அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில் பிரத்யேக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி கருத்து தெரிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், 5 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் சிறப்பான நடவடிக்கைக்கு வெள்ளிமலை மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் கூறுகையில், “வனத்துறையின் நேரக் கட்டுப்பாடுகளால் (மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி) அவசர காலங்களில் பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். சாலை மற்றும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குக் கூட வனத்துறையின் நெருக்கடியைச் சந்திக்கிறோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு வாக்குச்சாவடி அமைத்துத் தருவது போல், தமிழக அரசும் எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

Unique Polling Station: 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி… இந்தியாவையே வியக்க வைத்த ஆண்டிபட்டி ‘வெள்ளிமலை’ கிராமம்



Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 10 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }