– விளம்பரம் –
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதியான இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பந்து வீசியது.
வருண் சக்கரவர்த்தி நிகழ்த்திய மாபெரும் சாதனை :
அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. இதனால் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
– விளம்பரம் –
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் மில்லர் 63 ரன்களையும், பிரேவிஸ் 45 ரன்கள் குவித்தனர். இந்திய அணி சார்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது 4 ஓவர்கள் வீசிய தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தாலும் டேவிட் மில்லரின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அவர் எடுத்த இந்த விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடரில் தல தோனி விளையாடுவாரா? காசி விஸ்வநாதன் அளித்த பதில் – விவரம் இதோ
அதாவது இதுவரை வருண் சக்கரவர்த்தி கடைசியாக விளையாடிய 18 ஆட்டங்களிலும் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது அனைத்து போட்டிகளிலும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அர்ஷ்தீப் சிங்கின் மாபெரும் சாதனையை தகர்த்து அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்