“மே 4ஆம் தேதி வரை கனவு காணலாம்…”  – தவெக குறித்து தமிழிசை கருத்து | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

தவெக தலைவர் விஜய் 200க்கும் மேல் இடங்கள் வெல்வார் என்ற செங்கோட்டையன் கூற்றை கனவு, ஓவரான சத்தம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

செய்தி18
செய்தி18

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில், மழனி கோயிலில் சாமி தரிசனம் செய்த அக்கட்சி நிர்வாகியும், கோபிசெட்டிபாளையம் வேட்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது; ““நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் (விஜய்) திருச்செந்தூருக்கு சென்று முருகனை வழிபட்டு சென்றிருக்கிறார். இது ஒரு சிறந்த நாள். அவருடைய தொலைநோக்கு சிந்தனை, நாளை தமிழகத்தை ஆளுவது, மக்களால் ஒரு மனதாக அவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணங்களாக இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை உலகளவில் முதலில் பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி, சமூகப் புரட்சி தான் நடந்திருக்கிறது. ஆனால் வரும் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெறும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவரும், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “200-ஐ தாண்டி விசில் போகும் என்பதெல்லாம் ஓவரான சத்தம். விசிலுக்குனு ஒரு சத்தம் இருக்கு அதை தாண்டி சத்தம் வராது. பாம் சத்தம், வெடி சத்தம் மாதிரி சொல்கிறார். கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. மிஞ்சிப்போனால், 4ஆம் தேதி வரை கனவு காண்பார்கள் அவ்வளவுதானே. இன்று அவர் ஆன்மீக தேடலுக்கு போகிறார். அதன்பிறகு ஷூட்டிங்கிற்கு இடம் தேட போவாரா எனும் சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.



Thank You

Related Posts

இன்ஸ்டாவில் பிரபலமான தாய்.. மகனுக்கு போன ஒரே மெசேஜ்… தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான சுப்பிரமணியன். இவரது மனைவி 42 வயதான நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குழந்தை குடும்பம் என்று ஆன போதும் சுப்பிரமணியன் பொறுப்பற்ற குடும்பத் தலைவனாக இருந்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல்…

“அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை” – சென்னை உயர் நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 28, 2026 2:38 PM IST சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் நேரு மீது நேரடி வழக்குப்பதிவு உத்தரவு இல்லை, நியமன முறைகேடு வழக்கில் விசாரணை கோடை விடுமுறைக்கு பின் ஜூன் நான்காம் வாரத்துக்கு தள்ளி வைப்பு கே.என்.நேரு நகராட்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை

  • By admin
  • April 28, 2026
  • 15 views
நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை

“மே 4ஆம் தேதி வரை கனவு காணலாம்…”  – தவெக குறித்து தமிழிசை கருத்து | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 8 views
“மே 4ஆம் தேதி வரை கனவு காணலாம்…”  – தவெக குறித்து தமிழிசை கருத்து | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்…ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!

  • By admin
  • April 28, 2026
  • 4 views
Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்…ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!

இன்ஸ்டாவில் பிரபலமான தாய்.. மகனுக்கு போன ஒரே மெசேஜ்… தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 9 views
இன்ஸ்டாவில் பிரபலமான தாய்.. மகனுக்கு போன ஒரே மெசேஜ்… தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ‘ஜன நாயகன்’ படம் பார்த்தவர் கைது! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 28, 2026
  • 8 views
அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ‘ஜன நாயகன்’ படம் பார்த்தவர் கைது! | பொழுதுபோக்கு செய்திகள்

மத்தியப் பிரதேச பூலேக் போர்ட்டல் கையேடு – TN செய்திகள்

  • By admin
  • April 28, 2026
  • 8 views
மத்தியப் பிரதேச பூலேக் போர்ட்டல் கையேடு – TN செய்திகள்
.site-info { display: none; }