– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது லீக் போட்டியானது இன்று முள்ளன்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவிக்க 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
– விளம்பரம் –
இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 62 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 59 ரன்களையும் குவித்து அசத்தினர். அதேவேளையில் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டையும், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பர்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் மொத்தமாக 12 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் 2026 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ஒரு மாபெரும் சாதனையை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எடுக்க இதை செய்யுங்க போதும்.. பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த புஜாரா
அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை இந்த தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர்கள் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்து இந்த தொடரில் முதல் அணியாக நூறு சிக்ஸர்களை அடித்த அணியாக சாதனை நிகழத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்