இந்தியாவில் இந்த ஆண்டு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தங்களது சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி அணியில் இருந்து விலகிய கெவின் பீட்டர்சன் :
அதோடு இந்த ஆண்டு மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது பத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களது சொந்த மைதானங்களில் முன்கூட்டியே முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒரு சில வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகி வரும் வேளையில் முக்கிய நிர்வாகிகள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு டெல்லி அணியின் ஆலோசகராக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தற்போது தனது மென்டார் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் வந்ததால் சி.எஸ்.கே அணியின் இந்த பிரச்சனை தீரும் – பியூஷ் சாவ்லா கருத்து
இந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கான ஆலோசகராக செயல்பட மாட்டேன். இந்த பதவியிலிருந்து விலகுகிறேன். அதற்கு காரணம் யாதெனில் : ஆலோசராக செயல்பட போதிய கால அவகாசம் வழங்காததால் இந்த முடிவினை எடுத்துள்ளேன். அதேவேளையில் இந்த ஐபிஎல் தொடரில் போட்டியின் வர்ணனையாளராக செயல்படுவேன் என்றும் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
பதவி உங்க டீமே எனக்கு வேணாம்.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கெவின் பீட்டர்சன் – என்ன காரணம்? முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.