– விளம்பரம் –
எதிர்வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், அனுபவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் ஐபிஎல் தொடர் குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த அதிரடியான துவக்க ஜோடி யார்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா குறித்து பேசிய : புஜாரா
கடந்த இரண்டு சீசன்களாகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பான அதிரடி துவக்கத்தை வழங்கி வருகின்றனர். என்னை பொறுத்தவரை ஐபிஎல் வரலாற்றில் அதிரடியான துவக்க ஜோடி என்றால் அது இவர்கள் இருவர் தான் என்று கூறுவேன்.
– விளம்பரம் –
ஏனெனில் இந்த இரண்டு வீரர்களுக்கும் எதிராக எந்த ஒரு பந்துவீச்சாளரும் பந்துவீச பயப்படுவார்கள். அதிரடியாக விளையாடுவது மட்டுமின்றி தொடர்ச்சியாக அவர்கள் 250 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன் குவிப்பை இரண்டு சீசன்களாக வழங்கி வருகின்றனர். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.
அந்த வகையில் இந்த இரண்டு துவக்க வீரர்களும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதோடு போட்டியின் முதல் பந்தில் இருந்தே சிக்ஸர்களை விளாசும் திறமையும் அவர்களிடம் இருக்கிறது. இதன் காரணமாகவே அவர்களை அதிரடியான துவக்க வீரர்கள் என்று கூறுகிறேன். ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் கிரிஸ் கெயில் மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறந்த துவக்க ஜோடியாக இருந்தனர்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : உங்க டீமே எனக்கு வேணாம்.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கெவின் பீட்டர்சன் – என்ன காரணம்?
ஆனால் அவர்களை விட இவர்கள் இருவரும் அபாயகரமாக வீரர்களாக இருக்கிறார்கள் என புஜாரா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை துவக்க வீரர்களை தவிர்த்து கிஷான் கிஷன், ஹென்றிச் கிளாசன் போன்ற முக்கிய வீரர்கள் அதிரடியாக ஆடும் திறனை கொண்டுள்ளனர். எனவே இந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்