ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ரூ.51 லட்சம் மோசடி… அப்பாவிகளை ஏமாற்றியவர்கள் சிக்கியது எப்படி…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

சென்னையில் ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் வலைவிரித்து, அப்பாவிகளிடம் மோசடி செய்தவர்கள் சிக்கியது எப்படி?

ஆன்லைன் வர்த்தக மோசடி
ஆன்லைன் வர்த்தக மோசடி

சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 51 லட்சம் ரூபாயை மோசடி செய்த 4 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் வலைவிரித்து, அப்பாவிகளிடம் மோசடி செய்தவர்கள் சிக்கியது எப்படி?

“ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான்” என்ற சினிமா டயலாக்கை உண்மையாக்கும் வகையில் நாள்தோறும் ஆன்லைன் மோசடி அரங்கேறுவது வாடிக்கையாகிவிட்டது. தெரியாத எண்களில் இருந்து வரும் செல்போன் அழைப்பு, மெசேஜ், லிங்க் ஆகியவற்றால் மோசடி வலைவிரிப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும் அப்பாவிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகவே உள்ளது. இணையவழி மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் 42 வயதான ஜாகீர் உசேன். இதேபோன்று அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 49 வயதான அருண் கிருஷ்ண ராஜா. இவர்கள் இருவரும் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுவதற்கு கடந்த ஆண்டு முடிவு செய்துள்ளனர். அந்த நேரம் பார்த்து அவர்களுக்கு என்றாற்போல் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘ஆன்லைன் டிரேடிங்’ தொடர்பாக விளம்பரம் வந்துள்ளது.

உடனே சற்றும் தாமதிக்காமல் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு பேசியுள்ளனர். அப்போது எதிர்திசையில் பேசியவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப மும்மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதைக் கேட்டு ஜாக்பாட் அடித்ததாக நினைத்துக் கொண்ட ஜாகீர் உசேன், மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் 28 லட்சத்து 70 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதேபோன்று அருண் கிருஷ்ண ராஜா 23 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

ஆனால், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த பணத்திற்கு எந்தவொரு லாபமும் வராமல் இருந்துள்ளது. மேலும், முதலீடு செய்த பணமும் கிடைத்த பாடில்லை. இதையடுத்துதான் இருவரும் ஆசை வார்த்தையை நம்பி, மொத்த உழைப்பையும் இழந்ததை உணர்ந்துள்ளனர். பின்னர், ஆவடி சைபர் கிரைம் பிரிவில் கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஆந்திராவில் பற்றியெரிந்த தனியார் பேருந்து… தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் துடிதுடித்து பலி…

தொடர்ந்து பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், மோசடியில் ஈடுபட்ட தருமபுரியைச் சேர்ந்த ஆறுமுகம், பாக்கியராஜ் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி, தினகரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைதான நான்கு பேரும் தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இவர்கள்தான் அப்பாவி மக்களிடம் ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்து முதலீடு செய்ய வைத்துள்ளனர். தொடர்ந்து முதலீடு செய்ய வைக்கும் மோசடித் தொகைக்கு ஏற்ப ‘கமிஷன்’ தொகை பெற்றுள்ளனர். தற்போது இடைத்தரகர் போன்று செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், திரைமறைவில் இருந்து இவர்களை இயக்கி, மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர்களை கூண்டோடு கைது செய்த போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 51 லட்சம் ரூபாயை மோசடி செய்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம், ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Thank You

Related Posts

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!
.site-info { display: none; }