குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை – எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்



எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக தம்பிகளுடன் சேர்ந்து பிளான் போட்டுள்ளார் குணசேகரன். இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் எதிர்பாரா ட்விஸ்ட்களுடன் சென்று கொண்டிருக்கிறது. ஜனனி வீட்டுக்கு வந்ததும் ஆதி குணசேகரனை பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இன்றி வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தங்கள் கணவன்மார்களுடன் ஜோடியாக சேர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து முடித்துள்ளார்கள். இதன்பின் பெண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும் என ஐயர் சொல்ல, அவர்களுக்கு சாப்பாடு பரிமாற வருமாறு கதிர் மற்றும் ஞானத்தை விசாலாட்சி அழைத்து இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

விசாலாட்சி அழைத்தபோது வாய் திறக்காமல் இருந்த கதிர் மற்றும் ஞானம், தன் அண்ணன் ஆதி குணசேகரன் சொன்னதும் உள்ளே சென்று தங்கள் மனைவிக்கு சாப்பாடு பரிமாற போகிறார்கள். அப்போது நந்தினிக்கு சாப்பாடு பரிமாறும் கதிர் கோபத்தில் சுட சுட இருக்கும் சாதத்தை அவர் மேலே சிந்துகிறார். இதைப் பார்த்து கடுப்பான விசாலாட்சி, ஒழுங்கா பரிமாறுவதாக இருந்தால் பரிமாறு இல்லன்னா இங்க இருந்து போ என திட்டுகிறார். பின்னர் ஆதி குணசேகரன், டேய் கதிர் பொறுமையா பாருங்க என புத்திமதி சொல்ல, அதன் பின்னர் மெதுவாக சாதத்தை வைத்து நந்தினிக்கு சாப்பாடு பரிமாறுகிறார். மறுபுறம் ஞானம் ரேணுகாவுக்கு சாப்பாடு போடுகிறார்.

வீட்டில் சாப்பிட்டு முடித்த கையோடு ஜனனியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார் சக்தி. அங்கு ஜனனிக்கு செக்கப் நடைபெறுகிறது. அவரை பரிசோதித்த டாக்டர் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்லா ஹெல்தியா இருக்கு எனக்கு கூறுகிறார். இதைக் கேட்ட ஜனனி மற்றும் சக்தி இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அதன் பின் ஒரு குண்டையும் தூக்கி போட்டுள்ளார். அது என்னவென்றால் ஜனனியின் யூட்ரஸ் ரொம்ப வீக்காக இருப்பதாக கூறியுள்ளார். அது வீக்காக இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையும் என்று கூறியுள்ளார். தான் கொடுக்கும் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடவும் அறிவுறுத்தி உள்ளார்.

ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததிலிருந்து எதையோ யோசித்துக் கொண்டே இருந்த ஆதி குணசேகரன், அவர் ஆஸ்பத்திரிக்கு சென்ற பின்னர் தன் வீட்டின் வெளியே உள்ள கார்டனில் அமர்ந்திருக்க, அப்போது அங்கே வரும் கதிர் மற்றும் ஞானத்திடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என சொல்கிறார். அது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் அங்கிருந்த கரிகாலனை வீட்டுக்குள் போகச் சொல்கிறார். அனேகமாக கதிரை தூண்டிவிட்டு ஜனனி வயிற்றில் வளரும் கருவை கலைக்க ஆதி குணசேகரன் பிளான் போட்டிருக்க வாய்ப்பு உள்ளது. தம்பிகளுடன் சேர்ந்து அவர் என்ன திட்டம் தீட்டி இருக்கிறார் என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.



Thank You

Related Posts

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }