– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
லக்னோ அணிக்கெதிரான தோல்வி குறித்து : ரஹானே வருத்தம்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரகுவன்சி 45 ரன்களையும், ரஹானே 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
– விளம்பரம் –
இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக முகுல் சவுத்ரி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரகானே கூறியதாவது : இந்த போட்டியில் தோல்வியை ஏற்றுக்கொள்வது உண்மையிலேயே கடினமான ஒன்று.
ஆனாலும் எங்களது அணியின் வீரர்களின் செயல்பாட்டை நினைத்து பெருமையாக உணர்கிறேன். எங்களது அணியின் வீரர்களும் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஆனால் இந்த போட்டியின் முடிவை முகுல் சவுத்ரியின் இன்னிங்ஸ் மாற்றிவிட்டது. அவர் மிகவும் தைரியமாக ஆடினார். இந்த போட்டியில் தவறு எங்கு நடந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஆனாலும் 18-வது ஓவர் வரை போட்டி எங்கள் கையில் இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் முகுல் மிகச் சிறப்பாக விளையாடி அவர்களது அணிக்கு வெற்றி பெற்று தந்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டார்.. ஆனா மற்றொரு முக்கிய வீரர் விளையாடுவார் – வெளியான தகவல்
கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற போது அனைத்து பந்துகளையும் அவர் விளாசவே முயற்சி செய்தார். அவரது தைரியமான ஆட்டத்தினால் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இந்த போட்டியில் எங்களது பீல்டிங்கும் சற்று மோசமாக இருந்தது. ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்