– விளம்பரம் –
கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது 8 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதோடு இதுவரை இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாகவும் பஞ்சாப் அணி இருந்து வருகிறது.
யாருக்குமே இந்திய டி20 அணியில் இடமில்லை : சேவாக் கருத்து
அதேபோன்று மற்றொரு புறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு சில அணிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
– விளம்பரம் –
மேலும் பெங்களூரு அணி வீரர்களான தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் போன்றோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடும் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் தங்களது அற்புதமான பார்மை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்திய டி20 அணியில் இந்த ஐந்து வீரர்களுக்குமே இடம் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
பலரும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை தற்போதைய இந்திய டி20 அணியில் எந்த ஒரு வீரருக்கும் இடமில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஆகிய 5 பேரும் இந்த ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. எப்போது கம்பேக்? – விவரம் இதோ
ஆனால் இந்திய டி20 அணியில் யாரை நீக்கிவிட்டு இவர்களுக்கு இடம் கொடுக்க முடியும். ஏற்கனவே இந்திய டி20 அணி அடுத்தடுத்து இரண்டு உலக கோப்பையை வெற்றி பெற்ற அணியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சூரியகுமார் யாதவ் தலைமையில் அவர்கள் எந்த ஒரு தொடரையும் இழக்கவில்லை. எனவே எந்த வீரரை வெளியேற்றிவிட்டு புதிய வீரருக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் எனவே ஐ.பி.எல் பார்மை வைத்து யாருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்