– விளம்பரம் –
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றன. பின்னர் சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.
4 ஆவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய சாதனை :
அரையறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அதேபோன்று தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது. பின்னர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மாபெரும் இறுதி போட்டியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது.
– விளம்பரம் –
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 255 ரன்களை குவிக்க 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதோடு நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை தக்க வைத்து அடுத்த தொடர்களில் வெற்றி பெற்ற அணியாகவும் சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரை வென்றதன் மூலம் சூரியகுமார் யாதவ் நான்காவது இந்திய கேப்டனாக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக 1983-ஆம் ஆண்டு கபில் தேவ் முதல்முறையாக இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுத்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த – சஞ்சு சாம்சன்
அவருக்கு அடுத்து தோனி 2007 மற்றும் 2011 ஆண்டுகளில் ஐசிசி கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அதேபோன்று கடந்த 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா ஐசிசி கோப்பையை பெற்று கொடுத்திருந்தார். இப்படி மூன்று கேப்டன்கள் இந்திய அணிக்காக ஐ.சி.சி கோப்பையை வென்ற வேளையில் நான்காவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவ் இந்த ஐசிசி கோப்பையை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்