இந்தியாவில் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 சீசனானது இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு காத்திருக்கிறது என்பது உறுதி. இதற்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தா அணி பலவீனமாக இருக்கிறது : சுரேஷ் ரெய்னா
இவ்வேளையில் இந்த 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் கே.கே.ஆர் அணியை பார்த்தால் பரிதாபமாக உள்ளதாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக இருக்கும் வேளையில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை பார்த்து தான் எனக்கு கவலையாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை காயம் காரணமாக தவறவிட்ட ஹர்ஷித் ராணா இந்த ஐபிஎல் தொடரையும் தவற விட்டுள்ளார்.
அதேபோன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இதனால் அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரை தாண்டி அந்த அணியில் வைபவ் அரோரா இருக்கிறார். அதேபோன்று கார்த்திக் தியாகியும் இருக்கிறார். ஆனால் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அந்த அணிக்கு இருக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : கேப்டன், கோச், ஹார்டிக் பாய் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான்.. அதான் என்னை காப்பாத்துச்சு – அபிஷேக் சர்மா பேச்சு
சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்களை பார்த்தால் தான் பிரச்சனையே இருக்கிறது. மற்ற அணிகளில் எல்லாம் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது கொல்கத்தா அணியை பார்க்க சற்று கவலையாகவே உள்ளது என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.
பதவி கே.கே.ஆர் அணியை பாக்கும் போது ரொம்ப பாவமா இருக்கு.. அதுக்கு காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா விளக்கம் முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.