– விளம்பரம் –
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான சுப்மன் கில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்திருந்தார். ஆனாலும் அவரது மோசமான ஆட்டம் காரணமாக அந்த தொடர் முடிந்த கையோடு அவர் டி20 அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுப்மன் கில்லின் கம்பேக் குறித்து பேசிய : புஜாரா
ஆனால் சுப்மன் கில்லின் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடியிருந்தார். இந்த சம்பவம் அப்போதே பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. டி20 அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்பட்ட சுப்மன் கில் இப்படி டி20 அணியிலிருந்து வெளியேற்றப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை அளித்திருந்தது.
– விளம்பரம் –
இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதின் மூலம் சுப்மன் கில்லால் மீண்டும் டி20 அணிக்கு திரும்ப முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சத்தீஸ்வர் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய டி20 அணியில் கில்லை சேர்க்காமல் விட்டதால் அது அவரை ஊக்கப்படுத்துவதாக இருக்கும்.
நிச்சயம் அவர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய தரமான ஒரு வீரராக இருக்கிறார். எனவே நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் டி20 இந்தியா அணிக்கு வந்துவிட முடியும். அதனை கணக்கில் கொண்டு அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : இந்தமுறை ஐ.பி.எல் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் – இர்பான் பதான் எச்சரிக்கை
மூன்று வடிவமான போட்டிகளிலும் விளையாடும் அவர் நிச்சயம் டி20 போட்டிகளுக்கான திட்டங்களிலும் இருப்பார். எனவே இந்த ஐபிஎல் தொடரில் அவர் 150 முதல் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் மீண்டும் இந்திய டி20 அணிக்கும் அவரால் வரமுடியும் என புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்