– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 37-வது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : ருதுராஜ் கெய்க்வாட் வருத்தம்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவிக்க பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் மைதானத்தின் தன்மையை கணிக்க நாங்கள் சற்று சிரமப்பட்டோம். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருந்தது.
பவுன்ஸ் மேலும் கீழும் இருந்ததால் சரியாக பந்து பேட்டுக்கு வரவில்லை. அதுமட்டும் இன்றி இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியவில்லை. ஒருவேளை இந்த போட்டியில் 170 முதல் 180 ரன்கள் வரை குவித்திருந்தால் நிச்சயம் அது ஒரு போராடக்கூடிய இலக்காக இருந்திருக்கும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்காக 4 ஆவது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
உண்மையிலேயே இந்த போட்டியின் போது பவர்பிளேவில் நாங்கள் சரியாக விளையாடாமல் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்ததால் தான் இந்த தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் இப்படி தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் என சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்