– விளம்பரம் –
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறயிருக்கும் இறுதி போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்திய அணி கோப்பையை ஜெயிக்காது : முகமது ஆமீர்
அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளும் மோதுகின்றன.
– விளம்பரம் –
இந்த இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதி போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக இந்தியா பங்கேற்றுள்ளதாலும் சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் என்பதனாலும் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில் இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரை வைத்து பார்க்கையில் இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று நினைக்கிறேன். நான் இன்னும் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் ஜஸ்ப்ரீத் பும்ராவை தவிர வேறு யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை. அதேபோன்று பீல்டிங்கை பார்த்தால் ஒரு போட்டிக்கு மூன்று முதல் நான்கு கேட்ச்களை அவர்கள் தவற விடுகின்றனர்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : கொல்கத்தா போட்டியில் இந்தியா தோத்து இருந்தா அவர்மீது தான் பழி போட்டு இருப்பாங்க – டூபிளெஸ்ஸிஸ் கருத்து
இப்படி ஒரே ஒரு பந்துவீச்சாளர் பலத்துடன் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதோடு பேட்டிங் ஒருநாள் சொதப்பினால் நிச்சயம் அந்த போட்டி இந்திய அணியின் கைவிட்டு சென்றுவிடும். இதன் காரணமாகவே இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்லாது என முகமது அமீர் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்