– விளம்பரம் –
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான பார்மை வெளிப்படுத்தி சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரராக இருந்து வந்தார். கடைசியாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போதும் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தார். ஆனால் அந்தப் போட்டியின் போது ரன் ஓடுகையில் மிகப்பெரிய சிரமப்பட்ட அவருக்கு மருத்துவ உதவியும் களத்தில் வழங்கப்பட்டது.
எஞ்சிய 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல் :
ஆனால் மீண்டும் தொடர்ந்து விளையாடி அவருக்கு தொடைப்பகுதியில் கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ரன் ஓடவே கஷ்டப்பட்டு இருந்தார். அந்த போட்டிக்கு பிறகு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவரது காயம் தீவிரமாக இருப்பது கண்டறியப்பட்டது.
– விளம்பரம் –
இதனால் ஆயுஷ் மாத்ரே இந்த தொடரில் இருந்து விலகக்கூட நேரிடலாம் என்று சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இவ்வேளையில் அவரது வாக்கு பலிக்கும் வகையில் சி.எஸ்.கே அணியின் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமான செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் :
ஆயுஷ் மாத்ரேவின் காயம் தீவிரம் அடைந்துள்ளதால் அவர் இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியான பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ஆயுஷ் மாத்ரேவிற்கு காயம் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் வரை தேவைப்படும். இந்த நேரத்தில் அவர் ஓய்வு மற்றும் சிகிச்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் இந்த சீசனில் மீண்டும் அவர் விளையாட வாய்ப்பில்லை.
– விளம்பரம் –
இதையும் படிங்க : சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா – விவரம் இதோ
ஆயுஷ் மாத்ரே விரைவாக குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம் என சி.எஸ்.கே அணி குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வந்த ஆயுஷ் மாத்ரே எஞ்சியுள்ள இந்த தொடரிலிருந்து விலகியுள்ளது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்