– விளம்பரம் –
அகமதாபாத் நகரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு நேற்று பெற்ற இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலிலும் தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முடிவுக்கு வந்த திலக் வர்மாவின் காத்திருப்பு :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 45 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
– விளம்பரம் –
அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டநாயகன் விருதினை பெற்றதன் மூலம் அவரது ஐந்து ஆண்டுகால ஏக்கம் முடிவு வந்துள்ளது.
அதாவது கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் இந்தப் போட்டிக்கு முன்னதாக 59 ஆட்டங்களில் விளையாடி ஒருமுறை கூட ஆட்டநாயகன் விருதினை வென்றது கிடையாது. ஆனால் நேற்று அவர் விளையாடிய 60-வது ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல் – என்ன நடந்தது?
ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் 49 போட்டிகளில் விளையாடி 2 சதத்தை அடித்துள்ள வேளையில் நேற்று தான் ஐ.பி.எல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்