– விளம்பரம் –
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதனால் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும் தோல்வியை சந்திக்காது என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்திய அணியின் துருப்பு சீட்டு இவர்தான் : அபிஷேக் சர்மா
ஆனால் சூப்பர் 8 சுற்றின் போது தென்னாப்பிரிக்க அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி அதன் பின்னர் சுதாரித்து ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியிலும் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.
– விளம்பரம் –
இந்த அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இந்திய அணியின் திருப்புச்சீட்டு பும்ரா தான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பெற்று வரும் வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக பும்ராவை நான் பார்க்கிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலும் சரி, மிடில் ஓவர்களிலும் சரி, இறுதிகட்ட ஓவர்களிலும் சரி எங்கு கொண்டு வந்தாலும் அவர் மிக சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்துகிறார். அவரது பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றுவதாக இருக்கிறது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – மெக்ராத் கணிப்பு
அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் ஹெட்மயரை வீழ்த்திய விதத்தை பார்க்கும் போது அவரைப் போன்று எந்த ஒரு வீரராலும் பந்துவீச முடியாது என்று தெரிகிறது. அந்த அளவிற்கு அவர் பந்துவீச்சில் இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்து வருகிறார். இந்த தொடரை பொருத்தவரை இந்திய அணி துருப்பு சீட்டு ஜஸ்ப்ரீத் பும்ரா தான் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்