இந்த வளர்ச்சிக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் முக்கிய காரணம் என அறிக்கை கூறுகிறது. 24 நகரங்களில் 18-ல் வாடகை சீராகவோ அல்லது உயர்ந்தோ காணப்படுகிறது. இது 2025-ன் கடைசி காலாண்டில் 17 ஆக இருந்தது. ஆசிய-பசிபிக் பகுதியிலேயே ஹாங்காங் SAR-ல் தான் ஆபிஸ் வாடகை மிக அதிகம். அங்கே ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு USD 158.96 செலவாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, டெல்லி-NCR தான் காஸ்ட்லியான மார்க்கெட். அங்கே ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு USD 72.33 வாடகை. இது ஆசிய-பசிபிக் அளவில் 6-வது காஸ்ட்லியான இடம்.
இதைத் தொடர்ந்து, மும்பை USD 68.51 வாடகையுடன் 8-வது இடத்திலும், பெங்களூரு USD 36.84 வாடகையுடன் 19-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு, மும்பை, டெல்லி-NCR ஆகிய மூன்று நகரங்களிலும் சேர்த்து, இந்த காலாண்டில் மட்டும் 1.88 கோடி சதுர அடி ஆபிஸ் இடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது 2025-ம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 3% அதிகம். குறிப்பாக மும்பையில், ஒரே காலாண்டில் 56 லட்சம் சதுர அடி இடம் வாடகைக்கு விடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை
முன்பெல்லாம் பெங்களூருவில் மட்டும் தான் அதிக கவனம் இருக்கும். ஆனால் இப்போது மற்ற நகரங்களிலும் ஆபிஸ் தேவை பரவலாக அதிகரித்திருக்கிறது. GCC எனப்படும் குளோபல் நிறுவனங்களின் மையங்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்றாலும், உள்நாட்டு நிறுவனங்களின் தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆபிஸ்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், புதிய கட்டிடங்கள் அந்த அளவுக்கு கட்டப்படவில்லை. டெவலப்பர்கள் பெரும்பாலும் குடியிருப்பு திட்டங்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த காலாண்டில் வெறும் 85 லட்சம் சதுர அடிக்கு தான் புதிய ஆபிஸ் இடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது வாடகைக்கு போன இட அளவில் பாதியை விடக் குறைவு.