– விளம்பரம் –
இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யின் சார்பில் முன்னாள் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகார்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்வுக்குழு தலைவராக பணி நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் ஐசிசி தொடர்களுக்கான இந்திய அணி மட்டுமின்றி இருதரப்பு தொடர், வெளிநாட்டு தொடர் என தேவைக்கு ஏற்ப அந்தந்த தொடர்களுக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வை முன்னின்று வழி வகுத்து கொடுத்து கொடுத்தார்.
தனது பதவியை நீட்டித்து தருமாறு வேண்டுகோள் வைத்த : அஜித் அகார்கர்
கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று அணிக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றார் போன்று அவர் வீரர்களை தேர்வு செய்து தருவதே அவருடைய முதன்மை பணியாகவும் இருந்து வந்தது. அஜித் அகார்கரின் பதவி காலத்தில் இந்திய அணி 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலக கோப்பை என பல்வேறு முக்கிய தொடர்களை கைப்பற்றியுள்ளது.
– விளம்பரம் –
அதிலும் குறிப்பாக மூன்று ஐசிசி கோப்பைகளையும் இவரது பதவி காலத்தின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் அவர் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்க முடியும். அதன் பின்னர் வேறு யாராவது அந்த பதவிக்கு வரலாம்.
ஆனால் தற்போது அஜித் அகார்கர் தனது பதவி காலத்தை 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை நீட்டித்து தருமாறு பி.சி.சி.ஐ-யிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அவருக்கு ஆதரவாக நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரும் இருப்பார் என்பதனால் அகார்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : விராட் கோலியால் முழுசா சுமையை சுமக்க முடியாது.. ஆனாலும் அவர்தான் ஆர்.சி.பி முதுகெலும்பு – ஏ.பி.டி பேச்சு
அஜித் அகார்கரின் இந்த கோரிக்கையை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்