விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிய மனு – ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

உயர்நீதிமன்றம் மதுரை கிளை
உயர்நீதிமன்றம் மதுரை கிளை

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த விடியல் எஸ். வீரபெருமாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தனது மனுவில், விபத்தில் பலியான 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 15 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையும் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகள் மற்றும் விபத்து குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்ற பொதுநல வழக்குகளுடன் இந்த மனுவையும் இணைத்து பட்டியலிட நீதிபதிகள் ஆணையிட்டனர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



Thank You

Related Posts

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறிப்பிட்டு, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியினை அமெரிக்கா விதித்துள்ளது. இதில் 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 25 சதவீத இம்மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது. இதனால்…

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் சமூக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இந்த சீசன் அவ்ளோதானா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பகிர்ந்த ஸ்டீபன் பிளமிங்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
இந்த சீசன் அவ்ளோதானா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பகிர்ந்த ஸ்டீபன் பிளமிங்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிய மனு – ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 27, 2026
  • 13 views
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிய மனு – ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 5 views
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை – Kumudam

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை: காவல்துறை தகவல் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 8 views
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை: காவல்துறை தகவல் – Kumudam

அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 9 views
பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam
.site-info { display: none; }