சந்திர சுக்கிரச் சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம் கடக ராசியின் பத்தாம் வீட்டில் உருவாக இருக்கிறது. பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. எனவே கடக ராசிக்காரர்கள் தொழில் ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலில் வளர்ச்சி காணப்படும். வேலையில் உங்களுக்கு தொல்லை கொடுத்த வந்த மேலதிகாரிகள் விலகுவார்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல உயர்வு ஏற்படும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நடைபெறும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)