– விளம்பரம் –
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் தங்களது முதலாவது வெற்றியை முதல் போட்டியிலேயே பதிவு செய்தது. இதன் மூலமாக கடந்த 13 ஆண்டு காலமாக சீசனின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து வந்த மோசமான சாதனைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் இம்பேக்ட் வீரராக விளையாடியது ஏன்? : கோச் விளக்கம்
இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹார்திக் பாண்டியா செயல்பட்ட வேளையில் இம்பேக்ட் வீரராக சூரியகுமார் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸின் போது பேட்டிங் செய்ய வந்தார். அப்படி பேட்டிங் செய்ய வந்த அவர் 8 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
– விளம்பரம் –
இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் இப்படி இம்பேக்ட் வீரராக வந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது பெரும்பாலும் ரோகித் சர்மா தான் இம்பேக்ட் வீரராக விளையாடி வந்தார். இப்போது திடீரென சூரியகுமார் யாதவை இம்பேக்ட் வீரராக மாற்றியது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்தது.
இந்த மாற்றத்திற்கு காரணமே சூரியகுமார் யாதவுக்கும், ஹார்திக் பாண்டியாவுக்கும் இடையே நிலவும் மோதல் தான் என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர். இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தயவு செய்து தேவையில்லாத கதைகளை உருவாக்காதீர்கள். அணியில் அனைவருமே ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : முதல் இந்திய வீரராகவும், 9 ஆவது சர்வதேச வீரராகவும் டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா
சூர்யகுமார் யாதவுக்கு இடுப்பு பகுதியின் கீழ் சிறிய தசைப்பிடிப்பு உள்ளது. அதுமட்டுமின்றி டி20 உலக கோப்பை போட்டியில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வந்ததால் சற்று ஓய்வு தேவைப்பட்டதால் தான் அவரை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்க முடிவெடுத்தோம். அடுத்த போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. எனவே அதற்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என்றும் ஜெயவர்த்தனே கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்