– விளம்பரம் –
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து அணியை பாராட்டிய சூரியகுமார் யாதவ் :
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களையும், ஷிவம் துபே 43 ரன்களையும் குவித்தனர். பின்னர் 254 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை குவிக்க இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
– விளம்பரம் –
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த வெற்றி அற்புதமான ஒன்று. இதுபோன்ற வலிமையான ஒரு அணியை வழிநடத்துவதில் மிகப் பெருமையாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் வேளையில் அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக எங்களது வீரர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். போட்டியின் ஆரம்பத்தில் விக்கெட்டை இழந்தாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் ரன் வேகத்தை கூட்டினார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : இந்தவொரு விடயம் போதும்.. இந்திய அணியை நாங்கள் வீழ்த்தி காட்டுவோம் – ஹாரி புரூக் சவால்
அதனால் எங்களால் மிகச் சிறப்பாக பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர முடிந்தது. அதேபோன்று இங்கிலாந்து அணி வீரர்களையும் பாராட்டியாக வேண்டும். எவ்வளவு ரன்கள் தான் உங்களுக்கு எதிராக அடிக்க வேண்டும் என்கிற அளவிற்கு அவர்களது சேசிங் மிகச் சிறப்பாக இருந்தது என இங்கிலாந்து வீரர்களை சூரியகுமார் யாதவ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்