முத்து மீண்டும் வீட்டுக்கு சென்ற நிலையில், அவரிடம் மீனா எங்கே என அண்ணாமலை கேட்க, அவள் வர மறுத்துவிட்ட விஷயத்தை சொல்கிறார் முத்து. அதைக்கேட்டதும் சந்தோஷப்படும் விஜயா, அப்பாடா இனி நம்ம வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்ல, அப்போது அருகில் இருந்த விஜயா, இதுமாதிரி மூட நம்பிக்கையை நம்புபவர்கள் முட்டாள்கள் என சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பி செல்கிறார். பின்னர் அண்ணாமலை முத்துவிடம் பேசி, மீனாவை எப்படியாவது வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திரு என சொல்கிறார். முத்துவும் அவளே கொஞ்ச நாள்ல வந்திருவா என கூறுகிறார்.