– விளம்பரம் –
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது லீக் சுற்று போட்டிகளை நிறைவு செய்ய காத்திருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் வேளையில் அடுத்ததாக சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த சூப்பர் 8 போட்டிகளுக்கான ஒரு பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.
தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய : ஷான் பொல்லாக்
மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. அந்த வகையில் இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு அறிவுரை வழங்கும் விதமாக சில கருத்துக்களை அந்த அணியின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் பகிர்ந்துள்ளார்.
– விளம்பரம் –
அதில் அவர் கூறியதாவது : இந்த சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி சமபலம் வாய்ந்த போட்டியாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களின் திறனுக்கு ஏற்ப தென்னாப்பிரிக்க அணியிலும் வலிமையான வீரர்கள் இருக்கின்றனர். அதன்காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பலமான ஒன்றாக இருக்கும்.
ஆனால் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரையும் கவனமாக பார்த்து விளையாட வேண்டும். ஏனெனில் பும்ரா ஒரு வித்தியாசமான பௌலிங் ஆக்சனை கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் எப்பேர்பட்ட பவுலர் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் அவரை சமாளிக்க வேண்டிய வழியை கண்டறிந்தாக வேண்டும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : திலக் வர்மா சூப்பர் 8 சுற்றில் இந்த விடயத்தை மாற்றியே ஆகனும்.. இல்லனா கஷ்டம் தான் – இர்பான் பதான் கருத்து
அதேபோன்று வருண் சக்கரவர்த்தியும் மிஸ்டரி ஸ்பின்னர் என்பதனால் அவரது பந்து வீச்சிலும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இவர்கள் இருவரையும் கலந்து விட்டால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியால் வெற்றிபெற முடியும் என ஷான் பொல்லாக் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்