– விளம்பரம் –
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்த நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் சென்னை அணியில் இருந்து டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்பட்டார். ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு சென்ற வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வந்திருந்தார். இந்த டிரேடிங் அப்போதே பெரிய அளவில் பேசப்பட்டது.
போட்டியின் இடையே கண் கலங்கியது ஏன்? : ரவீந்திர ஜடேஜா விளக்கம்
ஏனெனில் சென்னை அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த ரவிந்திர ஜடேஜாவை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் மூன்றாவது ஆட்டமானது நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெர்சியுடன் ஜடேஜா விளையாடி இருந்தார்.
– விளம்பரம் –
இந்த போட்டியின் போது பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்த ஜடேஜா 3 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக விளையாடுவதை நினைத்து பவுண்டரி லைனின் அருகே ஜடேஜா கண்கலங்கியவாறும் நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கு பிறகு தான் ஏன் மைதானத்தில் கண் கலங்கினேன்? என்பது குறித்து ஜடேஜா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த 12-13 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயணித்துள்ளேன். எனவே சி.எஸ்.கே அணியிலிருந்து பிரிந்தது முதலில் சற்று கடினமாக தான் இருந்தது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி சார்பாக எம்.எஸ் தோனியின் சாதனையை தகர்த்த ஜேமி ஓவர்டன் – விவரம் இதோ
அதை நினைத்து மைதானத்தில் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன். ஆனால் இதுவும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் என என்னை நானே தேற்றிக் கொண்டேன். ஆனாலும் நான் முதன் முதலில் கோப்பையை வென்ற அணிக்கே மீண்டும் திரும்பி இருப்பதும் நல்ல விடயம் தான் என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்