கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
வரும் 1-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 1-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடந்த மாதம் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து, மதுரையில் வரும் ஒன்றாம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அதற்காக பிப்ரவரி 28ஆம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
மார்ச் 1-ம் தேதி காலை 10:30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் அவர் அங்குள்ள ஏர்போர்ட் மைதானம் என்ற இடத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிறகு மதியம் 2 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் ஏர் ஃபோர்ஸ்க்கு வருகிறார்.
அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு சென்றடைந்து அங்கிருந்து பொதுக்கூட்டத்திற்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மாலை 4 மணியளவில் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபட உள்ள பிரதமர் மோடி, மாலை 6 மணியளவில் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.