மகா(ன்)பிரசாதம்: அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்? – Kumudam


அம்மனுக்கு ஆயிரம் வடிவங்கள் ஏன்?

-ஜெயாப்ரியன்

அம்பிகை லோகமாதா என்றால், எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

ஏன் பராசக்தி, துர்க்கை, காளி,மாரி என்று ஆளுக்கு ஒரு வடிவமாகச் சொல்லியிருக்கிறார்கள்? என்று சிலபேர் கேட்கிறார்கள்.

எல்லா உயிர்களுக்குமே தாயார் என்று இருந்தே ஆகவேண்டும். அதேசமயம், மத்த எந்த ஜீவராசிக்கும் இல்லாத ஒரு விஷயம், மனுஷக் குழந்தைகளுக்கு உண்டு.

அது, எப்போதும் தாயார்க்காரி கூடவே இருக்க வேண்டும். அதாவது, குழந்தைக்குத் தேவையான எல்லாவற்றையும் அம்மா செய்துவிட்டாலும் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய சுபாவம், இந்த மனுஷக் குழந்தைக்கு இயல்பாகவே இருக்கிறது.

இந்த குணம் சில குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு கூட மாறுவதில்லை. கல்யாணமாகி அகத்துக்காரி வந்த பிறகும்கூட அம்மாவை எதிர்பார்க்கிறவர்களை ‘அம்மா கோண்டு!’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா?

மனுஷத் தாயிடமே இத்தனை எதிர்பார்ப்பு என்றால், இந்த லோகத்துக்கே அம்மாவாக, ஜகத் ஜனனியாக இருக்கக் கூடிய தாயாரிடத்திலே எத்தனை எதிர்பார்ப்பு இருக்கும்?

ஆனால் ஒரு விஷயம் கவனித்தீர்கள் என்றால், எல்லோருக்குமே ஒரே தாய் என்றாலும், அந்தத் தாயை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? என்பதுதான் மாறுபடுகிறது.

வீரம் வேண்டும் என்பவர் துர்க்கையாக, காளியாகப் பார்க்கிறார். தனம் தேவையானால் அவளே மகாலக்ஷ்மியாகிவிடுவாள். படிப்பு, ஞானம் எல்லாம் வேண்டும்போது அவளே சரஸ்வதியாக வேஷம் தரித்துக்கொண்டுவிடுவாள். அதாவது யார், எதைக் கேட்கிறார்களோ அதைத் தரும்போது அந்த வேஷத்தை ஜகன்மாதா எடுத்துக்கொள்கிறாள்.

இதெல்லாம் பார்க்கிறவர்கள் பார்வையில்தான் மாறுபாடே தவிர, மற்றபடி ஜகன்மாதா, பராசக்தி என்பதெல்லாம் ஒரே தெய்வம்தான். ஒரே அம்பிகைதான்.

எல்லா இனிப்பு பட்சணமும் ஒரே ருசிதான். ரூபம்தான் வேறு.

இதைப் புரிந்துகொள்வதற்குதான் ஞானம் தேவைப்படுகிறது. அதற்கு முதல் அடியாக இருப்பது பக்தி. அதுதான் பூரணமாகும்போது ஞானம் ஆகிறது.

(பிரசாதம் மணக்கும்)



Thank You

Related Posts

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனைப் பாம்பு கடித்த நிலையில், அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக ஒரு மாந்திரீகிடம் அழைத்துச் சென்றனர். அந்த மாந்திரீகர், சிறுவனை கங்கை நதியில் மிதக்க வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்று…

பெண்களே, தாய்மார்களே ஜாக்கிரதையாக இருங்கள் : திமுகவின் தகவல் திருட்டுக்கு எடப்பாடி எச்சரிக்கை  – Kumudam

திருச்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  திமுகவினர் செய்த தகவல் திருட்டு காரணமாக அனைவரும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய இபிஎஸ், ‘’திமுக ஆட்சியில், 10 மாதங்களுக்கு முன்பு உங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

  • By admin
  • April 17, 2026
  • 10 views
ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 17, 2026
  • 9 views
அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 6 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 6 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 10 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam
.site-info { display: none; }