கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றுதான் ஒவ்வொரு ஆண்டும் அனைவராலும் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி தினமும் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார்.
இந்த நிலையில் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வருகின்ற மே ஒன்றாம் தேதி சிறப்பாக நடைபெற இருக்கின்றது. அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் அதனை ஒட்டி மே ஒன்றாம் தேதி ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
இதனை அடுத்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அதாவது ஆற்றுப்பகுதி முழுவதும் தண்ணீர் சீராக வருவதற்கு தூர்வாரப்படுகின்றது. ஆகாய செடிகள் மற்றும் தேவையில்லாத செடிகளை அகற்றக் கூடிய பணிகள் நடைபெறுகின்றது அதேபோல் மாற்றுப் பகுதியில் மண்டபம் அமைத்து சுற்றியும் வேலிகள் அமைக்கக்கூடிய பணியும், மண்ணை சமப்படுத்தும் பணிகள் மற்றும் சிமெண்ட் அடிக்கக்கூடிய பணிகள் என்று பல்வேறு பணிகள் ஆனது சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
கிட்டத்தட்ட 50 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கக்கூடிய நிலையில், இன்னும் நான்கு நாட்களுக்குள் முழுமையாக இந்த பணி முடிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு தயாராகிவிடும் என்று கூறப்படுகின்றது.
ஏப்ரல் 26, 2026 11:52 AM IST