பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி மந்திரக்கல் பூஜை… நகை, பணம் பறிப்பு… கொடுத்த நகையை கேட்டால் கொலை மிரட்டல்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மந்திரக் கற்களை வைத்து பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மந்திரக்கல் மோசடி
மந்திரக்கல் மோசடி

தேனி மாவட்டத்தில் குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் சிக்கியது எப்படி? மந்திரக்கல்லை வைத்து பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்ட குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் அடுத்த கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தி பௌசியா. 55 வயதான இந்த பெண்ணிடம் கடந்த ஆண்டு தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

மந்திர தந்திரத்தில் நம்பிக்கை கொண்ட பெண்ணிடம் நாகராஜ் தனது சித்து வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார். அவரிடம் தேனியில் உள்ள ரத்தினம் நகரில் ஆண்டவர் என்பவர் வசித்து வருவதாகவும், அவரிடம் விசித்திரமான மந்திரக் கற்கள் உள்ளதாகவும் புரூடா விட்டுள்ளார். அந்த மந்திரக் கற்களை வைத்து பூஜை செய்தால் உங்களிடம் உள்ள பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார்.

ஜீ பூம் பா கதையாக மந்திரம் சொன்னதும் முன்னால் இருக்கும் பணம் அப்படியே இரட்டிப்பாகும் என ஏகத்துக்கும் அளந்து விட்டுள்ளார். அதைக் கேட்டதும் சித்தி பௌசியா அப்படியா? என ஆச்சரியப்பட்டுள்ளார். பின்னர், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று ரத்தினம் நகரில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு சித்தி பௌசியா சென்றுள்ளார். அங்கு சென்றதும் தன்னிடம் இருந்த 2 சவரன் தங்கச் செயின் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆண்டவரிடம் கொடுத்துள்ளார்.

மேலும், சித்தி பௌசியாவுடன் சென்ற வெங்கடேசன் மற்றும் பெரியண்ணா ஆகியோரும் தங்களிடம் இருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களையும் கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஆண்டவர் கூறியதுபோல் மந்திரக் கற்கள் எதையும் கொடுக்காததுடன், எந்தவொரு மாயாஜாலமும் நிகழாமல் இருந்துள்ளது. அதனால், ஆண்டவர் மற்றும் நாகராஜ் கூறிய அனைத்தும் புரூடா என்பதை சித்தி பௌசியா உணர்ந்துள்ளார். தொடர்ந்து, தாங்கள் கொடுத்த நகை, பணம் மற்றும் செல்போனை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு ஆண்டவரும், நாகராஜும் தங்களது சகாக்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இரு குழந்தைகளின் தாயான பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்… பின்னணி என்ன…?

அப்போதுதான் அவர்கள் ஒரு கும்பலாக மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடனே, பாதிக்கப்பட்ட பெண் தேனியில் உள்ள அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆண்டவர் மீது தேனி, அல்லிநகரம், வீரபாண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு குற்ற வழக்குகளில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர், மந்திரக் கற்கள் மாயாஜால வித்தை காட்டி பலரிடம் பணம் பறித்ததும் அம்பலமானது.

இதையடுத்து ஆண்டவர், நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஆண்டவர் மற்றும் நாகராஜை மட்டும் அல்லிநகரம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கூட்டாளிகளையும் கூண்டோடு கைது செய்ய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மந்திரக் கற்களை வைத்து பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி மந்திரக்கல் பூஜை… நகை, பணம் பறிப்பு… கொடுத்த நகையை கேட்டால் கொலை மிரட்டல்…



Thank You

Related Posts

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – மதுகேசவ் பொற்கண்ணன் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }