Song: உள்ளம் உருகுதய்யயா!
உன்ன உத்து உத்து பாக்கயுல
Singers: Pradeep Kumar, Vandana Srinivasan, Brindha Manickavasakan
Lyricist: Yugabharathi
Composer: D.Imman
அழகா! அழகா!
உள்ளம் உருகுதய்யயா!
உன்ன உத்து உத்து பாக்கயுல
உள்ளம் உருகுதய்யயா!
நீ கொஞ்சி கொஞ்சி பேசயுல
தின்ன மாங்கனி நான் தரவோ!
திண்ணை பேச்சென மாறிடவோ!
கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுனை ஏந்திடவோ!
சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள்
உன்னால் உன்னால் விளையுமே!
உள்ளம் உருகுதய்யயா!
உன்ன உத்து உத்து பாக்கயுல
உள்ளம் உருகுதய்யயா!
நீ கொஞ்சி கொஞ்சி பேசயுல
கவன் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ!
அவனோடு பொறியாய் எனை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ரசிப்பதுவோ!
உச்சி தலை முதல் அடி வரை
எனை இழுத்தே முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி
கற்றை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும் கற்று கொடுத்திட
நிறைந்திடும் பூமடி
கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்கக் கடெலனும் சங்கத் தமிழினில் மூழ்கடி
உள்ளம் உருகுதய்யயா!
உன்ன உத்து உத்து பாக்கயுல
உள்ளம் உருகுதய்யயா!
நீ கொஞ்சி கொஞ்சி பேசயுல
தின்ன மாங்கனி நான் தரவோ!
திண்ணை பேச்சென மாறிடவோ!
கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுனை ஏந்திடவோ!
சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள்
உன்னால் உன்னால் விளையுமே!
உள்ளம் உருகுதய்யயா…..