கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15க்குள் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் பாஜகவின் வெளிமாநில பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், ஏப்ரல் 15ஆம் தேதி வரை மட்டுமே நிர்வாகிகளுக்குத் தேர்தல் பணி இருக்கும், அதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஏப்ரல் பாதியில் தேர்தல் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடி பிறமொழி பேசும் மக்களின் வாக்குகளைப் பெற, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் தமிழகத்துக்கு கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர்.