கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.
வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், பல விமானங்களில் டிக்கெட்கள் தீர்ந்தன. ஒரு சில விமானங்களில் மட்டுமே டிக்கெட் கிடைக்கும் சூழலில், அதன் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் 5 ஆயிரத்து 354 ரூபாய் ஆக இருக்கும் விமானக் கட்டணம், தற்போது 17 ஆயிரத்து 527 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு 13 ஆயிரத்து 320 ரூபாயும், திருச்சிக்கு 14 ஆயிரத்து 237 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு சாதாரண நாட்களில் டிக்கெட் கட்டணம் 4 ஆயிரத்து 634 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 16 ஆயிரத்து 339 ரூபாயாகவும், சேலத்திற்கு விமான டிக்கெட் 12 ஆயிரத்து 27 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் அதிகரித்தாலும், பயணிகள் பலர் போட்டிப் போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு?