85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று: தவெக தலைவர் விஜய் பெருமிதம் – Kumudam



இதுகுறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.

85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?

தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.

குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய – உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Thank You

Related Posts

எந்த போட்டியில் தோனி களமிறங்குவார்? சிஎஸ்கே அணி நிர்வாகம் புது அப்டேட்  – Kumudam

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தற்போது தசைப்பிடிப்பு (Calf Strain) காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஏழு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இருப்பினும், தோனி தற்போது வலைப் பயிற்சிகளுக்கு…

கர்நாடக நில பதிவுகள்: உங்கள் அத்தியாவசிய வழிகாட்டி – TN செய்திகள்

அறிமுகம் இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கர்நாடகாவின் பூமி போர்ட்டல் போன்ற முன்முயற்சிகளுக்கு நன்றி, நிலப் பதிவேடுகளின் மேலாண்மை மிகவும் திறமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாறியுள்ளது. இந்த தளம் குடிமக்கள் தங்கள் நிலத் தகவலை அணுகுவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு நெறிப்படுத்தப்பட்ட வழியை வழங்குகிறது, வெளிப்படைத்தன்மை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Pasumai Vikatan – 10 May 2026 – நெல், கோதுமை ஊக்கத்தொகை நீக்கம்… அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் அம்பலம்!

  • By admin
  • April 25, 2026
  • 7 views
Pasumai Vikatan – 10 May 2026 – நெல், கோதுமை ஊக்கத்தொகை நீக்கம்… அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் அம்பலம்!

தாய், மகன் வெட்டிக்கொலை… வீட்டிற்குள் நடந்த கொடூர சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 11 views
தாய், மகன் வெட்டிக்கொலை… வீட்டிற்குள் நடந்த கொடூர சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Jana Nayagan | ஜனநாயகன் ‘லீக்’ – எடிட்டர் சங்கம் எடுத்த முக்கிய நடவடிக்கை!  | சினிமா செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 13 views
Jana Nayagan | ஜனநாயகன் ‘லீக்’ – எடிட்டர் சங்கம் எடுத்த முக்கிய நடவடிக்கை!  | சினிமா செய்திகள்

85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று: தவெக தலைவர் விஜய் பெருமிதம் – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 9 views
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று: தவெக தலைவர் விஜய் பெருமிதம் – Kumudam

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: திருவள்ளூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை – ஆட்சியர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 6 views
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: திருவள்ளூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை – ஆட்சியர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

எண்ணெய் மட்டும் அல்ல.. பாராசிட்டமால் விலை 4 மடங்கு உயர்வு.. ஹார்முஸ் நெருக்கடியால் வந்த விளைவு

  • By admin
  • April 25, 2026
  • 8 views
எண்ணெய் மட்டும் அல்ல.. பாராசிட்டமால் விலை 4 மடங்கு உயர்வு.. ஹார்முஸ் நெருக்கடியால் வந்த விளைவு
.site-info { display: none; }