– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியானது நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வைத்து அசத்தியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
3 ஆவது இந்திய வீரராக சமீர் ரிஸ்வி நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
– விளம்பரம் –
இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக சமீர் ரிஸ்வி 90 ரன்கள் குவித்து அந்த அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் அவருக்கு நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் பெற்ற இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே இந்த 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த அவர் நேற்றைய இரண்டாவது போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அதுமட்டும் இன்றி கடைசியாக கடந்த ஆண்டு அவர் விளையாடிய கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : 21 அல்லது 25 வயதில் வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் இதை செய்வார்.. அவர் நல்ல டேலன்ட் – ஜாஸ் பட்லர் புகழாரம்
இப்படி தொடர்ச்சியாக மூன்று ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டநாயகன் விருதுகளை வென்ற எட்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்