– விளம்பரம் –
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்தார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியானது நடைபெற்று வருகிறது.
ரோஹித் சர்மாவுக்கு பதில் புதியவீரர் அறிமுகம் :
இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிவரும் வேளையில் இன்றைய போட்டியில் மீண்டும் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் காயம் இன்னும் குணமடையாததால் அவருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
– விளம்பரம் –
இதன் காரணமாக அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.
கடந்த போட்டியில் ரிக்கல்டன் துவக்க வீரராக டி காக்குடன் இணைந்து விளையாடி இருந்தார். ஆனால் இன்றைய போட்டியின் போது அவர் அணியில் இடம் பிடிக்கவில்லை. இதன் காரணமாக 22 வயதான விதர்பா அணியை சேர்ந்த இளம் வலதுகை துவக்க ஆட்டக்காரரான டேனிஷ் மலேவர் என்கிற வீரருக்கு துவக்க வீரராக அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் களமிறங்கிய அவர் ரபடாவிற்கு எதிராக 4 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் சாதனையை முறியடித்த – பஞ்சாப் கிங்ஸ்
அதனை தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வேளையில் இன்றைய குஜராத் அணிக்கெதிரான போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்