கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்களுக்கு அரியர் பாடங்களை முடிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீண்டநாளாக நிலுவையில் உள்ள அரியர் பாடங்களை முடிக்க, இறுதி வாய்ப்பாக தேர்வுகளில் பங்கேற்க புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் தகவலின்படி, செமஸ்டர் முறையில் இளங்கலை (A18, C19, A19, C20, A20) மற்றும் முதுகலை (A18, C19, A19, C20, A20, C21, A21) பேட்ச்களில் சேர்ந்த மாணவர்கள் பழைய பாடங்களில் தேர்ச்சி பெற இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அரியர் தேர்வுகளை எழுத இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவை 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜூன் தேர்வு அமர்வுகள் ஆகும். இந்த இரண்டு அமர்வுகளும் இறுதி வாய்ப்புகளாகக் கருதப்படுகின்றன.
2025 டிசம்பர் நடைபெறவிருந்த தேர்வுகள் 2026 ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளன. இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா படிப்புகளில் உள்ள மாணவர்கள் மே மாதத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க Institute of Distance Education இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். இந்த இறுதி வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொல்ல வேண்டும் .